Friday, March 29, 2024

Latest Posts

மைத்திரியின் கடிதத்திற்கு புடின்னின் பதில் கடிதம்

ஏரோஃப்ளோட் விமானம் தொடர்பான சர்ச்சையை தீர்க்கக் கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு கடந்த 5ஆம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ஜனாதிபதி புடின் மைத்திரிபால சிறிசேனவிற்கு பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

சிறிலங்காவுக்கான ரஷ்ய தூதுவர் யூரி மேட்டேரியினால் நேற்று சிறிசேனவிடம் இந்த கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஏரோஃப்ளோட் இலங்கையுடனான விமான சேவையை மீண்டும் தொடங்க எதிர்பார்த்துள்ளதாக ரஷ்ய தலைவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் தலையிடுமாறு ரஷ்ய தலைவர் மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியை சமாளிக்க எரிபொருள், உரம் உள்ளிட்ட உதவிகளை வழங்க ரஷ்ய அரசாங்கம் தயாராக இருப்பதாக ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார். எனினும், இலங்கை அரசாங்கம் இதுவரை சாதகமாக பதிலளிக்கவில்லை.

இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி தலையிடுமாறும் தூதுவர் கோரிக்கை விடுத்துள்ளார்

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.