மைத்திரியின் கடிதத்திற்கு புடின்னின் பதில் கடிதம்

Date:

ஏரோஃப்ளோட் விமானம் தொடர்பான சர்ச்சையை தீர்க்கக் கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு கடந்த 5ஆம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ஜனாதிபதி புடின் மைத்திரிபால சிறிசேனவிற்கு பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

சிறிலங்காவுக்கான ரஷ்ய தூதுவர் யூரி மேட்டேரியினால் நேற்று சிறிசேனவிடம் இந்த கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஏரோஃப்ளோட் இலங்கையுடனான விமான சேவையை மீண்டும் தொடங்க எதிர்பார்த்துள்ளதாக ரஷ்ய தலைவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் தலையிடுமாறு ரஷ்ய தலைவர் மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியை சமாளிக்க எரிபொருள், உரம் உள்ளிட்ட உதவிகளை வழங்க ரஷ்ய அரசாங்கம் தயாராக இருப்பதாக ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார். எனினும், இலங்கை அரசாங்கம் இதுவரை சாதகமாக பதிலளிக்கவில்லை.

இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி தலையிடுமாறும் தூதுவர் கோரிக்கை விடுத்துள்ளார்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...

உள்ளூர் வாகனச் சந்தையில் பாரிய விலை உயர்வு?

வாகன இறக்குமதிக்காக அரசாங்கம் முன்னதாகவே ஒதுக்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலரை...