தமிழர் பகுதியில் திறந்து வைக்கப்படும் மற்றும் ஒரு பௌத்த விகாரை

Date:

வவுனியா வடக்கு நெடுங்கேகேணி வெடிவைத்தகல் பகுதியில் கச்சல்சமளங்குளம் தமிழர் பகுதியில் சப்புமல்கஸ்கட ரஜமகா விகாரை ஒன்று கட்டி முடிக்கப்பட்டு விகாரை திறக்கப்பட்டது.

1980ஆம் ஆண்டுவரை தமிழர்கள் வாழ்ந்து போரின் காரணமாக இடம்பெயர்ந்ததால் சிங்கள மயமாகிவரும் இக் கிராமத்தில் தொல்லியல் அடையாளம் எனக் கூறப்பட்டு தமிழர்கள் தடுக்கப்பட்டு வந்தனர்.

அவ்வாறான பகுதியிலேயே இந்த விகாரை அமைக்கப்பட்டு நிறைவுபெற்று இன்று திறப்புவிழா இடம்பெறுவதோடு அநுராதபுரத்தில் இருந்தும் பெருமளவு பௌத்த துறவிகள் பாத யாத்திரை வருகின்றனர்.

ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்டம் குறுந்தூர்மலையில் உள்ள
தொல்லியல் இடத்தில் நீதிமன்ற உத்தரவினையும் மீறி இராணுவத்தினரின் துணையுடன் விகாரை அமைத்த கல்கமுவ சந்தபோதி தேரரே தற்போது
வெடிவைச்சகல் பகுதியில் புதிய விகாரையினையும் அமைத்துள்ளார்.

இந்த விகாரை அமைக்கப்பட்ட பகுதி அருகே இருந்த இரு குளங்களை பாரிய அளவில் புனரமைத்து அப் பகுதியில் இரகசிய சிங்கள மயமாக்கலை மேற்கொண்ட போது வடக்கு மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சரும் தமிழ் அரசுக் கட்சியின் பதில் செயலாளருமான ப.சத்தியலிங்கம் அப்பகுதிக்குச் சென்று விடயத்தை வெளிக்கொணர்ந்தபோது அநுராதபுரம் மாவட்ட உத்தியோகத்தர்கள் இரகசியமாக  அப்பகுதியில் பணியாற்றியமையும் கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வாறு சர்ச்சையில் காணப்பட்ட இடத்தில் தற்போது 462 சிங்கள குடும்பங்கள் உள்ளமையும்  குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...

அரசியல் களத்தில் மீண்டும் பணிகளை தொடங்கிய ரணில்

இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து ஓய்வில் இருந்த முன்னாள் ஜனாதிபதியும்...

பாடகர் சங்கீத்சன் விடுதலை வலியுறுத்தி போராட்டம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சன் கணேஸ்குமாரை...

காரணமின்றி கைது செய்ய வேண்டாம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தகுந்த காரணம் இன்றி தன்னைக்...