ஆலய வளாகத்தில் மது விற்றவருக்கு ஆளுநர் புகட்டிய பாடம்!

Date:

இந்துக்களின் புனித பூமியான திருக்கோணேச்சர ஆலய வளாகத்தில் கசிப்பு விற்ற மாற்று இனத்தவர், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலையீட்டால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் ஆலய வளாகத்தில் கசிப்பு விற்றுவந்த நிலையில், பொலிசாரால் கைது செய்யப்பட்டு, 4000 ரூபாய் தண்ட பணம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுமிருந்தார்.

மீண்டும் அவர் திருக்கோணேச்சர ஆலய வளாகத்திற்கு திரும்பியதையடுத்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கவனத்திற்கு ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் கொண்டுவந்ததை அடுத்து, ஆளுநரின் தலையீட்டில் திருகோணமலை நகரசபை செயலாளர், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் உட்பட பொலிஸார் திருக்கோணேச்சர ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கடைக்கு உடனடியாக சீல் வைத்துடன், குறித்த நபரை அவ்வளாகத்தில் இருந்து வெளியேற்றினர்.

ஆளுநரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஊர்காவற்றுறை பிரதேச சபை வரவு செலவு திட்டம் தோல்வி

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஆளுகையில் உள்ள ஊர்காவற்றுறை பிரதேச சபை...

வெளியானது வெட்டுப்புள்ளி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப்...

இந்திய துணை ஜனாதிபதியுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்...

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...