எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

Date:

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றுவதற்கான தகுதியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தொடர்பாக,மேன்முறையீட்டு நீதிமன்றம் புதன்கிழமை பிரதிவாதிகளுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பியது.

இந்த வழக்கு நீதியரசர்களான மாயாதுன்னே கொரே,  மஹேன் கோபல்லவா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் 2025  ஆகஸ்ட் 1 அன்று திருப்பியும்  அனுப்பப்பட்டது. மனுதாரர் ஆரம்ப கட்டத்தில் கோரிய இடைக்கால உத்தரவை வழங்க நீதிமன்றம் மறுத்து விட்டது.

 பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனாவுக்கு ஆஜரான வழக்கறிஞர் செனனி தயாரத்ன, தனது கட்சிக்காரருக்கு எதிராக முறையான அறிவிப்புகள் மற்றும் இடைக்கால நிவாரணம் வழங்குவதற்கான சமர்ப்பிப்புகளை வழங்கினார்.

சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத்,இராமநாதன் அர்ச்சுன பாராளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதியற்றவர் என்று அறிவிக்கும் குவோ வாரண்டோ  கோரி இந்த மனுவைதாக்கல் செய்தார்.

இராமநாதன் அர்ச்சுனா , சுகாதார அமைச்சுடன் இணைக்கப்பட்ட ஒரு பொது அதிகாரி என்றும்,எனவே, ஒரு பொது அதிகாரியாக,அவருக்கு அரசுடன் ஒப்பந்தம் இருப்பதாகவும் மனுதாரர் கூறினார்.

சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் சார்பாக வழக்கறிஞர் ஷெனல் பெர்னாண்டோவுடன் வழக்கறிஞர் என்.கே. அசோக்பரன் ஆஜரானார்.

எம்.பி. அர்ச்சுனவுக்காக வழக்கறிஞர் செனனி தயாரத்ன மற்றும் நிஷாதி விக்ரமசிங்க ஆகியோர் ஆஜராகினர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...