நீதிபதி வீட்டில் நகை மற்றும் பணம் திருட்டு

Date:

ஊராபொல போபத்த பிரதேசத்தில் உள்ள மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவரின் வீட்டில் இருந்து ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான தங்கப் பொருட்களும் ஆறு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணமும் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தணகல்ல பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் திருட்டு நடந்தபோது நீதிபதி வீட்டில் இல்லை என்றும் வேலையாட்கள் மட்டுமே இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

பொலிசார் நடத்திய விசாரணையில், வீட்டின் அலமாரியில் இருந்த சிறிய பெட்டகத்திலிருந்து தங்கப் பொருட்கள் மற்றும் பணம் காணாமல் போனது தெரியவந்தது.

கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் ரோஹனவின் பணிப்புரையின் பிரகாரம், அத்தனகல்ல பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் யசேந்திர நாலக தலைமையில் விசாரணை நடத்தப்படவுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...

ரணிலுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்தும் விசாரணை இறுதிக்...

வங்காள விரிகுடாவில் தாழமுக்க எச்சரிக்கை

நவம்பர் 22 ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு புதிய...

திருமலை சம்பவத்துக்கு திருமா கண்டனம்!

கவுதம புத்தர், சிங்கள இனவெறி ஆதிக்கத்தை தமிழ் மண்ணில் நிறுவுவதற்கான கருவியா? சிங்கள...