நீதிபதி வீட்டில் நகை மற்றும் பணம் திருட்டு

Date:

ஊராபொல போபத்த பிரதேசத்தில் உள்ள மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவரின் வீட்டில் இருந்து ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான தங்கப் பொருட்களும் ஆறு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணமும் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தணகல்ல பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் திருட்டு நடந்தபோது நீதிபதி வீட்டில் இல்லை என்றும் வேலையாட்கள் மட்டுமே இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

பொலிசார் நடத்திய விசாரணையில், வீட்டின் அலமாரியில் இருந்த சிறிய பெட்டகத்திலிருந்து தங்கப் பொருட்கள் மற்றும் பணம் காணாமல் போனது தெரியவந்தது.

கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் ரோஹனவின் பணிப்புரையின் பிரகாரம், அத்தனகல்ல பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் யசேந்திர நாலக தலைமையில் விசாரணை நடத்தப்படவுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

MV X-Press Pearl விபத்துக்கு இழப்பீடு வழங்க சிங்கப்பூர் ஏன் மறுக்கிறது?

மே–ஜூன் 2021 இல் ஏற்பட்ட MV X-Press Pearl விபத்து, இலங்கை...

மீண்டும் இலங்கையை கட்டி எழுப்புவோம்

கடந்த நாட்களில், நமது நாடு கடினமான மற்றும் இதயத்தை உடைக்கும் சவாலை...

15ஆம் திகதிக்கு முன்னர் அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது

அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கைது செய்து எதிர்வரும் 15 திகதிக்கு...

பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவும் Dreamro!

நாடு முழுவதும் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவுவதற்காக...