இலங்கையிலும் விரைவில் ஜல்லிக்கட்டு!

0
97

இலங்கையிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடாத்த ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான், திருச்சிக்கு சென்றார்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மிளகுபாறையில் உள்ள ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்க மாநில தலைவர் ஒண்டிராஜின் இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்தார்.

அப்போது, செந்தில் தொண்டமானுக்கு மாலை, சால்வை அணிவித்து, கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செந்தில் தொண்டைமான், இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here