புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் அமைச்சர் டிரான் அலஸ் கைகளில்

Date:

நாட்டின் பொலிஸ் மா அதிபர் பதவி 13 நாட்கள் வெற்றிடமாக உள்ளது. அது, முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு ஜூன் 26ஆம் திகதியுடன் முடிவடைந்த பின் வெற்றிடம் ஏற்பட்டது.

இந்த நிலையில் பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு இடையில் கடந்த வியாழக்கிழமை கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் அதிபரை நியமிக்க வேண்டுமா அல்லது சி.டி. விக்ரமரத்னவுக்கு மீண்டும் சேவை நீடிப்பு வழங்கப்படுமா என்பதை தீர்மானிக்குமாறு ஜனாதிபதி அமைச்சர் டிரான் அலஸுக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி நாளை (09) பிற்பகல் ஜனாதிபதி மற்றும் அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கிடையில் மற்றுமொரு விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும், அங்கு பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்பட வாய்ப்புள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரசாங்கத்திற்குள் பிளவேதும் இல்லை

அரசாங்கத்திற்குள் எந்த நெருக்கடியும் இல்லை என்று அமைச்சர் கே.டி. லால் காந்தா...

வீட்டு பயனாளிகளுக்கு தபாலில் அனுப்ப வேண்டிய கடிதத்துக்கு எதற்கு பெருவிழா?

தோட்ட மக்களின் வீடுகளுக்கான உரிமைப் பத்திரங்கள் இதுவரை அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளன,...

அரசுக்கு எதிராக வீதிக்கு இறங்க தயாராகும் சஜித்!

அரசாங்கம் ஏதேனும் வகையில் மின் கட்டணத்தை அதிகரித்தால், வீதியில் இறங்கி அதற்கு...

களுத்துறை தெற்கு பகுதியில் துப்பாக்கிச் சூடு

களுத்துறை தெற்கு பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது, மோட்டார் சைக்கிளில் வந்த...