கோட்டாபய ராஜபக்ஷ விரட்டி அடிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தி

Date:

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியிலிருந்தும் நாட்டை விட்டும் தப்பிச் செல்ல வேண்டிய நிலைக்கு இட்டுச் சென்ற பாரிய மக்கள் போராட்டத்திற்கு இன்றுடன் (09) ஒரு வருடம் பூர்த்தியாகிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக சகிப்புத்தன்மையின் எல்லையை எட்டிய இலட்சக்கணக்கான மக்கள் 2022 ஜூலை 09 அன்று நாட்டின் பல பாகங்களில் இருந்து கொழும்புக்கு வந்து கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு கோரி போராட்டங்களை நடத்தினர்.

ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் கையகப்படுத்தியதுடன், ஜனாதிபதி மாளிகையில் தங்கியிருந்த கோட்டாபய ராஜபக்ச கடைசி நேரத்தில் படகில் ஏறி தப்பிச் சென்றுள்ளார்.

அந்த மக்கள் போராட்டத்தை 1953 ஹர்த்தாலுக்குப் பிறகு இலங்கையில் நடந்த மிகப்பெரிய அரசியல் போராட்டம் என்று சொல்லலாம்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

புதிய தேர்தல் ஆணையாளர் நாயகம்

புதிய தேர்தல் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் இன்று (14) முதல்...

இந்த வரவு செலவு திட்டத்தை தோண்டத் தோண்ட தங்கம் வரும்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தாக்கல் செய்த 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்,...

இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் பலாலி பகுதிகளில் தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை...

இலங்கைக்கு பாம்பு, ஆமை கடத்தும் மர்ம கும்பல்

சென்னையை மையமாக வைத்து, வெளிநாடுகளில் இருந்து அரியவகை உயிரினங்கள் கடத்தப்பட்டு, அவை...