ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்!

Date:

நாட்டின் அரசியல் யாப்பு சட்டதிட்டங்களுக்கு அமைய நாட்டு நிர்வாகத்தை முன் கொண்டு செல்லும் நோக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன சற்று நேரத்திற்கு முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறி உள்ள நிலையில் அவர் இன்று 13 ஆம் திகதி பதவி விலகுவது தொடர்பில் அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ஜனாதிபதி பதவி விலகும் போது பிரதமர் இரண்டு வாரங்களுக்கு பதில் ஜனாதிபதியாக பொறுப்பேற்பார் என்ற அரசியல் யாப்பு விதிமுறைகளுக்கு அமைய ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தலை நடத்த புதிய சட்டம் அவசியம் – சட்டமா அதிபர் திணைக்களம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றம் புதிய சட்டங்களை நிறைவேற்ற வேண்டும்...

நீரில் மூழ்கி 2 யுவதிகள் உட்பட மூவர் பலி

நொச்சியாகம- தழுவ முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற இரு இளம் பெண்கள்...

பிரதேச சபை உறுப்பினர்கள் 5 பேர் SJB கட்சியிலிருந்து நீக்கம்

களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்திய SJB உறுப்பினர்கள் ஐவர்...

கம்மன்பில கருத்துக்கு பொலீசார் பதில்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது...