ரணிலுடன் இணங்கிப் போவதை தவிர மைத்திரிக்கு வேறு வழியில்லை!

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தில் தொங்கிக்கொண்டு எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளார்.

இதன்படி அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சர்களாக பதவியேற்றுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக் குழுவிற்கு மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பதவிகள் வழங்கத் தயாராக இருப்பதுடன் அவர்களுடன் இரகசிய கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கான திகதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை ரகசியமாக நடந்தாலும் திலங்க சுமதிபால எப்படியோ அறிந்து கொண்டார். மைத்திரிபால சிறிசேனவைச் சந்திக்கச் சென்ற திலங்க, கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவிடம் இதனைக் கூறியதாகவும், இந்தக் கலந்துரையாடலை நடத்தாமல் இருப்பதற்கு மைத்திரிபாலவிற்கு பாரிய அழுத்தம் கொடுத்த போதும் மைத்திரிபால அதற்கு இணங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அரசாங்கத்திற்கு மாறிய குழுவினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைப்பாட்டில் இருந்த திலங்கவும், தயாசிறியும் தற்போது தனிமையில் இருப்பதாக கூறப்படுகிறது.

எனினும், மைத்திரிபால சிறிசேன பல வழக்குகளில் இக்காலத்தில் சிக்கியிருப்பதும், அதிலிருந்து விடுபடுவதற்கான வழியை யோசித்து வருவதும் இரகசியமல்ல.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மின் கட்டணம் அதிகரிக்காது

இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 2025 ஆம்...

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் திட்டம்

உயர் நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தற்போது பணியாற்றும்...

இஷாரா செவ்வந்தி கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி...

அரசாங்க தரப்புக்கு மீண்டும் படுதோல்வி

பத்தேகம கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர்கள் குழுவைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலில், ஐக்கியமக்கள்சக்தி...