ஹரி ஆனந்தசங்கரிக்கு இலங்கையில் கதவடைப்பு

Date:

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரிக்கு இலங்கை அரசு விசா வழங்க மறுத்துள்ளது.

இலங்கை தொடர்பாக, குறிப்பாக மனித உரிமைகள் பிரச்சினைகள் மற்றும் போர் தொடர்பான பிரச்சினைகள் குறித்து தாம் மேற்கொள்ளும் பணிகளுக்காகவே விசா மறுக்கப்பட்டது என்று ஹரி ஆனந்தசங்கரி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

“சுதந்திரமான பேச்சு, அரசுக்குப் பொருத்தமாக இருக்கும்போது அது அனுமதிக்கப்படுகின்றது. கொடும்பாவிகளை எரிப்பதால், இலங்கை அரசின் தொடர்ச்சியான தோல்விகளைச் சரி செய்ய முடியாது. வருந்தத்தக்க வகையில், இலங்கை எனது விசாவை மறுத்துவிட்டது. இது நாம் செய்யும் பணிக்கான பழிவாங்கலாகும். எனவே, நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்” என்று ஹரி ஆனந்தசங்கரி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஹரி ஆனந்தசங்கரி இலங்கையின் முன்னணி தமிழ் அரசியல்வாதியான வி.ஆனந்தசங்கரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் திட்டம்

உயர் நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தற்போது பணியாற்றும்...

இஷாரா செவ்வந்தி கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி...

அரசாங்க தரப்புக்கு மீண்டும் படுதோல்வி

பத்தேகம கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர்கள் குழுவைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலில், ஐக்கியமக்கள்சக்தி...

தோட்ட தொழிலாளர் சம்பளம் தொடர்பில் ஜனாதிபதி பேச்சு

முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன்...