Friday, May 3, 2024

Latest Posts

10 கிலோ கேரள கஞ்சாவுடன் கடற்படை வீரர் கைது

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணப் பையில் 10 கிலோ கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற கடற்படை வீரர் ஒருவர் வவுனியா நகரில் வைத்து இன்று (14) அதிகாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் யாழ்ப்பாணத்தில் இருந்து கேரள கஞ்சாவை பேரூந்தில் கொண்டு வருவதாக வவுனியா தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த தகவலையடுத்து பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் பேருந்தை நிறுத்தி சோதனையிட்ட போது சந்தேக நபரிடம் இருந்து பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்படும் போது சந்தேக நபரிடம் தலா இரண்டு கிலோ எடையுள்ள 5 கேரள கஞ்சா பொதிகள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.