தலவத்துகொட வெலிபாறை பகுதியில் நேற்று (20) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பின்னர் உயிரிழந்துள்ளார்.
41 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.இவர் வீட்டில் தங்கியிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.