உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்கள் ஒத்திவைக்கக் கோரிய மனு நிராகரிப்பு

0
169

எதிர்வரும் கல்விப் பொதுத் தராதர உயர்தர (G.C.E. A/L) பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்கக் கோரி மாணவர்கள் குழுவொன்று தாக்கல் செய்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (23) நிராகரித்துள்ளது.

இந்த மனுவை தொடர்ந்து விசாரிக்கும் தகுதியையே சவாலுக்கு உட்படுத்தி சட்டமா அதிபர் ஆரம்பகட்ட எதிர்ப்புகளை முன்வைத்தார்.

இரு தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், ரிட் மனுவை நிராகரித்தது. இதன் மூலம், உயர்தரப் பரீட்சை முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படியே நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here