ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 40 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்

Date:

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான சுமார் 40 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் நேற்று தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி செயலகத்தில் மொத்தம் 749 பல்வேறு வகையான வாகனங்கள் உள்ளன. அவற்றில் 40 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த வாகனங்களுக்கு என்ன ஆனது என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

12 மோட்டார் சைக்கிள்கள், 17 கார்கள், 2 இரட்டை கெப் வண்டிகள், 6 ஒற்றை கெப் வண்டிகள் மற்றும் 3 வகையான வாகனங்கள் காணாமல் போயுள்ளன.

இதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்களில் முற்றுகையிடப்பட்ட ஜனாதிபதி செயலகம் அவர்களின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தது.

இதன்போது அங்கு சேதம் ஏற்படுத்தியவர்களை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை 150 பேருக்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

சமூக வலைத்தளங்களில் வெளியான காணொளிகள் மற்றும் புகைப்படங்களின் அடிப்படையில் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

உலக வங்கி – இலங்கை அரசாங்கம் இடையே ஐந்தாண்டு திட்டம் கைச்சாத்து

உலக வங்கி குழுமமும், இலங்கை அரசாங்கமும் இணைந்து புதிய ஐந்தாண்டு கூட்டாண்மை...

பிள்ளையான் விளக்கமறியலில்

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) வழக்கு தீர்ப்பு...

இந்தோனேசிய கடற் பகுதியில் பாரிய நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் வடக்கு மொலுகா கடற்பகுதியில் 7.4 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கம்...

IMF ஒப்பந்தம் காரணமாக மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது

சர்வதேச நாணய நிதியம் (IMF) உடன் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தின் காரணமாக, 2028...