ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 40 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்

Date:

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான சுமார் 40 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் நேற்று தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி செயலகத்தில் மொத்தம் 749 பல்வேறு வகையான வாகனங்கள் உள்ளன. அவற்றில் 40 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த வாகனங்களுக்கு என்ன ஆனது என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

12 மோட்டார் சைக்கிள்கள், 17 கார்கள், 2 இரட்டை கெப் வண்டிகள், 6 ஒற்றை கெப் வண்டிகள் மற்றும் 3 வகையான வாகனங்கள் காணாமல் போயுள்ளன.

இதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்களில் முற்றுகையிடப்பட்ட ஜனாதிபதி செயலகம் அவர்களின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தது.

இதன்போது அங்கு சேதம் ஏற்படுத்தியவர்களை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை 150 பேருக்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

சமூக வலைத்தளங்களில் வெளியான காணொளிகள் மற்றும் புகைப்படங்களின் அடிப்படையில் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கும் செந்தில் தொண்டமான்!

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய...

தங்கம் விலை நிலவரம்

இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று...

நிச்சயமற்ற நிலையில் மாகாண சபைத் தேர்தல்..

முரண்பட்ட காலக்கெடு மற்றும் அரசியல் சூழ்ச்சிகள் காரணமாக, வாக்காளர்கள் மற்றும் கட்சிகள்...

பிரதமர் ஹரிணி இந்தியா பயணம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டில்...