இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் அறிவுரை

Date:

இலங்கை அதன் பாரிய கடன் வழங்குநரான சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் குறித்து தீவிரமாக கலந்துரையாடலில் ஈடுபட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம்  (IMF) தெரிவித்துள்ளது.

நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன், ரொய்ட்டர்ஸுக்கு அளித்த பேட்டியிலேயே இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவர் அந்த பேட்டியில் தெரிவித்தாவது,

6 முறை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, பல மாதங்களாக எரிபொருள், உணவு மற்றும் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியதைத் தொடர்ந்து ஏற்பட்ட மக்கள் எழுச்சியால்  சமீபத்தில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.

எரிபொருள் இறக்குமதியை 12 மாதங்களுக்கு கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் அண்மையில் தீர்மானித்துள்ளது.

சர்வதேச நிதி நிர்வாக நிறுவகத்தின் தரவுகளின்படி பீஜிங்கிடம் இலங்கை 6.5 பில்லியன் டொலர் கடன்பட்டுள்ளது.

எனவே, கடனை நிலை நிறுத்துவதை உறுதிப்படுத்த மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டும்.

இலங்கை அதிகாரிகளுடன் சர்வதேச நாணய நிதியம் தொழில்நுட்ப ரீதியான பேச்சுவார்த்தைளில் ஈடுபட்டு வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

MV X-Press Pearl விபத்துக்கு இழப்பீடு வழங்க சிங்கப்பூர் ஏன் மறுக்கிறது?

மே–ஜூன் 2021 இல் ஏற்பட்ட MV X-Press Pearl விபத்து, இலங்கை...

மீண்டும் இலங்கையை கட்டி எழுப்புவோம்

கடந்த நாட்களில், நமது நாடு கடினமான மற்றும் இதயத்தை உடைக்கும் சவாலை...

15ஆம் திகதிக்கு முன்னர் அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது

அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கைது செய்து எதிர்வரும் 15 திகதிக்கு...

பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவும் Dreamro!

நாடு முழுவதும் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவுவதற்காக...