நபர் ஒருவரை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று (ஜூலை 28) பிற்பகல் அவர் பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
கடற்படை புலனாய்வு இயக்குநராக அவர் பணியாற்றிய காலத்தில், கேகாலையில் வசிக்கும் சாந்த சமரவீரவை திருகோணமலை துப்பாக்கி முகாமில் கடத்தி சட்டவிரோதமாக தடுத்து வைத்தது தொடர்பாக 2010 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.