இளைஞர் கழக விவகாரம் தொடர்பில் சஜித் அவதானம்

Date:

இளைஞர்களின் தாயகமான தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துடன் இணைந்ததான இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தால் மேற்கொள்ளப்படும் இளைஞர் கழகங்கள் மற்றும் பிரதேச இளைஞர் கழக சம்மேளனங்களை நிறுவுதல், இதற்கு முன்பு நடந்திராத வகையில் அரசியல் அழுத்தத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது என தெரிவித்து இளைஞர் மன்றத்தைச் சேர்ந்த பலர் எதிர்க்கட்சி தலைவரை சந்திக்க வருகை தந்தனர்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் தோற்றுவிக்கப்பட்ட காலத்தில் இருந்து முந்தைய அரசாங்கங்களின் போது அரசியல்மயமாக்கப்படுவதற்கு எதிராக பேசிய தற்போதைய தலைவர் சுபுன் விஜேரத்னவின் கீழே இந்த அரசியல்மயமாக்கல் நடைபெறுகிறது.

இங்கு திட்டமிட்ட அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியினது இளைஞர் அமைப்பின் பிரதிநிதிகள், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நெருங்கியவர்கள் இந்த இளைஞர் கழகங்களின் பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.

எதிர்வரும் பாராளுமன்ற அமர்வு நாட்களில் இது குறித்து பாராளுமன்றத்தின் அவதானத்துக்கு கொண்டு வருவேன் என இதன்போது சஜித் அவர்களிடம் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பஸ்களை அலங்கரிக்கத் தடை

பஸ்களை அலங்கரிப்பதற்கும், மேலதிக பாகங்களை பொருத்துவதற்கும் சட்ட அனுமதிகளை வழங்கி வெளியிடப்பட்ட...

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் பின்பற்றப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான தவணை அட்டவணையை கல்வி,...

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுஷிலா கார்க்கி நியமிப்பு

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக முன்னாள் பிரதம நீதியரசர் சுஷிலா கார்க்கி நியமிக்கப்பட்டுள்ளதாக...

பெக்கோ சமனின் நெருங்கிய நண்பர் கைது

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தலைவர்களில்...