ஜனாதிபதி நாடு திரும்பினார்

Date:

மாலைதீவுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நாடு திரும்பினார்.

மாலைதீவு ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயம் அமைந்திருந்தது.

இந்த விஜயத்தின் போது, மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சுவுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதுடன் அந்நாட்டின் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் அரச பிரதானிகளுடனும் ஜனாதிபதி கலந்துரையாடினார்.

இருதரப்பு, பிராந்திய, சர்வதேச விடயங்கள் தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் இலங்கை – மாலைதீவு இடையேயான பரஸ்பர சட்ட உதவி வழங்கல் தொடா்பான ஒப்பந்தம், மாலைதீவு வெளியுறவு சேவை நிறுவனம் மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்திற்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியன கைச்சாத்திடப்பட்டன.

மாலைதீவு மற்றும் இலங்கை இடையே இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் 60ஆவது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் தலைநகரில் உள்ள சுல்தான் பூங்காவில் ஜனாதிபதி அனுர குமாரவினால் மரக்கன்று நடப்பட்டது.

இலங்கை – மா​லைதீவு வர்த்தக பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட வர்த்தக சம்மேளனம் மற்றும் மாலைதீவுகளில் வசிக்கும் இலங்கை மக்களிடையேயும் ஜனாதிபதி உரையாற்றினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெளியானது முக்கிய வர்த்தமானி!

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட...

BYD ATTO 3 கார் இறக்குமதியில் பாரிய வரி மோசடி!

அம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்படாமல் இலங்கை சுங்கத்துறையினரால் சுமார் 1100 BYD ATTO...

கொஸ்கொடயில் இளைஞர் சுட்டுக் கொலை

கொஸ்கொட, துவாமோதர பகுதியில் இன்று (ஜூலை 31) அதிகாலை நடந்த துப்பாக்கிச்...

சீட் பெல்ட் அணியாவிட்டால் சிக்கல்

வாகனங்களில் ‘சீட் பெல்ட்’ சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக...