Saturday, May 4, 2024

Latest Posts

விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பரிதாபமாக பலி

இன்று காலை இடம்பெற்ற வேன் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

தம்புத்தேகம அரியாகம பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குருநாகலில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியோரத்தில் நிற்கும் போது, அதே திசையில் பயணித்த வேன் லொறியின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது வேனில் 8 பேர் பயணித்துள்ளனர்.

வேன் சாரதியின் கவனக்குறைவு காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர்கள் 36 மற்றும் 56 வயதுடையவர்கள்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.