தேசபந்துவை பதவி நீக்கும் பிரேரணை நிறைவேற்றம்

0
249

தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக 177 வாக்குகள் அளிக்கப்பட்டன. எதிராக எந்தவொரு வாக்கும் அளிக்கப்படவில்லை. 

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் வாக்களிப்பில் இருந்து விலகியிருந்தார். இதன்படி குறித்த பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களில் பாதி பேர், அதாவது 113 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தால் இந்த பதவி நீக்கும் பிரேரணையை நிறைவேற்ற முடியும். 

பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்த பிறகு, பொலிஸ்மா அதிபர் பதவிக்கான புதிய பெயரை ஜனாதிபதி அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரைப்பார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here