ஆயுதம் காண்பிக்கச் சென்ற மற்றுமோரு சந்தேகநபரின் கதையும் முடிந்தது!

Date:

கொட்டிகாவத்தை முல்லேரிய உள்ளூராட்சி சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் சுமுது ருக்ஷான் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சந்தேகநபர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின் போது கடுவெல பிரதேசத்தில் ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் விசேட அதிரடிப்படை வீரர்கள் சந்தேக நபரை ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு சந்தேக நபர் பாறை குழியில் விழுந்து காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கடவட உல பியன்வில பகுதியைச் சேர்ந்த துவான் சிரான் என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

இந்த சந்தேகநபர் அங்கொட லொக்கா என்ற சக்திவாய்ந்த பாதாள உலகக் குழுத் தலைவருக்கு நெருக்கமானவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இறந்தவர் மீது 13 கடுமையான குற்ற வழக்குகள் உள்ளதாக பொலீசார் கூறுகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...