சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்த விகாரை உரிமையாளருக்கு விளக்கமறியல்

0
87

சிறு மாணவர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட உனவடுனவில் உள்ள விகாரை உரிமையாளர் கபுவாவை (பூசாரி) எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி பிரதான நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திரன இன்று (11) உத்தரவிட்டுள்ளார்.

கபுவா (பூசாரி) சிறு மாணவர்களை துஷ்பிரயோகம் செய்வதாக காணொளிகள் மூலம் கிடைத்த தகவலுக்கு அமைய, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here