தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்புடன் ஜனாதிபதி சந்திப்பு!

Date:

ஏழு அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்பின் பிரதிநிதிகளும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்புடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை விசேட சந்திப்பொன்றை நடத்தவுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் சிவில் பிரதிநிதிகள் எழுவருக்கும் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தனித்தனியே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், ஸ்ரீகாந்தா ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்பதென உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதேவேளை, சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் சிவில் தரப்பினர் ஜனாதிபதி பேசுவதற்கு அழைத்த விடயம் சம்பந்தமான தெளிவற்ற நிலைமை காணப்படுவதால் அதுகுறித்து ஆராய்ந்து முடிவெடுப்பதாக அறிவித்துள்ளனர்.

இதேவேளை, சி.வி.விக்னேஸ்வரன் உடல்நலக்குறைவின் காரணமாக இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ள முடியாது என ஜனாதிபதி செயலகத்துக்கு அறிவித்துள்ளதோடு தனது கட்சிப் பிரதிநிதியொருவரை அனுப்புவதற்கு நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இன்றைய வானிலை

நாடு முழுவதும் வடகீழ் பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம்...

பாரிய அளவு நிதி அனுப்பும் வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள்

‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்’ நிதியம் இதுவரை வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்து கிட்டத்தட்ட...

இந்த வரவு செலவு திட்டம் வேண்டாம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தற்போதுள்ள வரவு செலவுத் திட்டங்களைத் திருத்தி,...

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் சேவையில்

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...