இலங்கை – இந்தியா இடையிலான பயணிகள் படகு சேவை – வெள்ளிக்கிழமை மீண்டும் ஆரம்பம்

0
176

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த பயணிகள் படகுச் சேவை இந்தியாவின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கசன்துறைக்கு இயக்கப்படவுள்ளது

இதேவேளை பயணிகள் படகு சேவைக்கான பயண சீட்டுகள் நேற்று (12) முதல் முன்பதிவுகள் ஆரம்பமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இந்த பயணிகள் படகுச் சேவையானது மே 13 ஆம் திகதி இடம்பெறுவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் பல்வேறு காரணங்களால் அது பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here