சர்வகட்சி அரசாங்கம் குறித்து நீதி அமைச்சர் கருத்து

0
57

சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு எந்தவொரு அரசியல் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்தால், அதற்கு ஆதரவளிக்கும் கட்சிகளுடன் இணைந்து அரசாங்கம் அமைக்கப்படும் என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“அனைத்து கட்சி ஆட்சி அமைப்பதற்கு எந்த அரசியல் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்தால், எங்களுக்கு வேறு வழியில்லை, சேர விரும்பும் அரசியல் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்போம். இது அனைத்துக் கட்சியாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் பல கட்சிகளின் ஆதரவைப் பெற முயற்சிக்கிறோம்.

சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கும் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கும் தொடர்பில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (13) கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே விஜேதாச ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here