கோடீஸ்வர வர்த்தகர் மாயம், மயானத்தில் கிடைத்த சாட்சி!

0
159

கொலொன்ன பிரதேசத்தில் வசிக்கும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கொலொன்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கோடீஸ்வர வர்த்தகர் நேற்று (16.08.2023) பணத்துடன் தனது வேனில் தெனியாய நகருக்குச் சென்றதாகவும் வீடு திரும்பவில்லை எனவும் வர்த்தகரின் மனைவி கொலொன்ன பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

பணத்துடன் வர்த்தகர் பயணித்த வேனை அனில்கந்த பொது மயானத்துக்கு அருகில் வைத்து பொலிஸார் மீட்டுள்ளனர். வர்த்தகர் காணாமல் போன விடயத்தை உறுதி செய்த கொலன்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here