அநுரவின் தேர்தல் ஆட்டம் இன்று ஆரம்பம்

0
38

தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரும், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அனுரகுமார திஸாநாயக்கவின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று (17) பிற்பகல் நடைபெறவுள்ளது.

அதன்படி இன்று (17) மாலை 04.00 மணிக்கு தங்காலையில் பேரணி ஆரம்பமாகவுள்ளது.

இன்று மாலை 05.00 மணிக்கு மாத்தறையிலும் 06.00 மணிக்கு காலியிலும் மேலும் இரண்டு பொதுக்கூட்டங்கள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாடு அநுரவுக்கு – ருஹுண முன்னிலையில் என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியின் கட்சி உறுப்பினர்கள் உட்பட பெருந்தொகையான மக்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here