ரணிலுக்கான மக்கள் ஆதரவு அணியுடன் விஜயகலா களத்தில்

Date:

ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக “காஸ் சிலிண்டர்” சின்னத்தில் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கான பிரச்சாரத்தை முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வடக்கில் ஆரம்பித்துள்ளார்.

முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரன், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கான தனது பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளதோடு ரணிலுக்கு ஆதரவான மக்கள் ஆதரவு அணி ஒன்றினை உருவாக்கியுள்ளார்.

இந்த முறை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால், ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் வெற்றி உறுதி என்பது தெளிவாக வுள்ளது.

ஏனெனில்வடக்கு மற்றும் கிழக்கு மாகாணமக்களின் ஆதரவு ரணிலுக்கு தான் என்பது உறுதியாகியுள்ளது.விஜயகலா மகேஸ்வரன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறைந்தது 90% வாக்குகளைப் பெறுவார் என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.

இது சாதாரண கருத்தல்ல மக்கள் ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் தலைமையின் மீது கொண்டுள்ள ஆழமான நம்பிக்கையின் வெளிப்பாடாகும்.2019ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் சஜித் பிரேமதாசவுக்கு கிடைத்த மிகுந்த ஆதரவு என்பது ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தினாலும் அவரால் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட வேலை திட்டத்தினாலும் அப்போதிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக,மக்களின் ஆதரவினை உருவாக்கியிருந்தார்.

தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களே தேர்தலில் போட்டியிடுவதால், இந்த முறை மக்களும் அவருடன் நிலைத்து நின்று, மிகப்பெரிய வெற்றியை உறுதி செய்வார்கள்.முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனால் மேற்கொள்ளப்படும் ரணிலுக்கு ஆதரவான பிரச்சாரம் வெறும் வாக்குகளைப் பெறுவதற்காக மட்டுமல்ல.அது ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ் நல்லிணக்கமும் பொருளாதார முன்னேற்றமும் கொண்ட எதிர்காலத்தை நோக்கி அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு வேலைத்திட்டமாகும்.

விஜயகலா மகேஸ்வரன் மக்களுடன் கொண்டுள்ள ஆழமான அடிப்படை தொடர்புகள் ஒவ்வொரு வாக்கும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் சிறப்பான வெற்றிக்கு நன்கு பங்களிக்கும் என்பதற்கான சான்றாகவுள்ளது.இம் முறை தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பதிவாகும் வாக்குகள் மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்த மாகாணங்கள் வரலாற்று ரீதியில் தேர்தல்களின் முடிவுகளை மாற்றியமைத்துள்ளன,இம்முறை வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் இந்த தேர்தலில் மிகப் பெரிய ஆதரவுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாக்களிக்கத் தயாராகவுள்ளனர்.

விஜயகலா மகேஸ்வரனின் ரணிலுக்கு ஆதரவான பிரச்சாரம், நாளுக்கு நாள் பலம் பெற்றுவரும் போது இந்த முறை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெறுவது உறுதியாக இருக்கிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...