எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தின் சகோதரியிடம் CID விசாரணை!

0
164

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சகோதரியான துலங்கலி பிரேமதாச நேற்று (20) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே ,துலங்கலி பிரேமதாச நேற்று (20) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

குறித்த வாக்குமூலத்தை வழங்கிவிட்டு வெளியில் வந்த துலங்கலி குறித்த சம்பவம் இடம்பெற்ற போது தானும் அந்த இடத்தில் இருந்ததாகவும் அது தொடர்பான வாக்குமூலமொன்றை வழங்குமாறு அறிவித்தலின் பிரகாரம் தான் வந்து வாக்குமூலம் வழங்கியதாகவும் ஊடகங்களுக்கு குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here