பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Date:

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் நடந்து சென்ற இருவர் மீது இன்று காலை முச்சக்கர வண்டியில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக களுபோவில போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றொருவரின் நிலை தற்போது சீராக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கல்கிஸ்ஸை, டெம்பிள் வீதியைச் சேர்ந்த ஷெஹான் துலான் பெரேரா (21) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இறந்த இளைஞர், பொரலஸ்கமுவ பரலாஸ் மைதானத்தில் இசை நிகழ்ச்சியைக் கண்டு வீடு திரும்புவதற்காக மற்றொரு குழுவுடன் மாலனி புலத்சிங்கள மாவத்தை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, ​​முச்சக்கர வண்டியில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இசை நிகழ்ச்சியின் போது அந்த இளைஞருடன் மோதிய ஒரு குழுவிற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதி அனுரவுக்கு நன்றி தெரிவித்தார் மோடி!

கொழும்பு கங்காராமய விகாரையில் புனித தேவ்னிமோரி (Devnimori) அவசரங்களின் (Relics) திருக்காட்சியை...

டில்வின் சில்வா உள்ளிட்ட குழு இந்தியா விஜயம்

“இந்திய கலாசார உறவுக் குழுவின்” (ICCR) அழைப்பிற்கு இணங்க மக்கள் விடுதலை...

மார்ச் 25 வரை உத்தரவு ஒத்திவைப்பு

2015 ஜனாதிபதி தேர்தல் காலத்தில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசியல்...

ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் அமைச்சர்களின் கருத்துகளுக்கு கார்டினல் கண்டனம்

தற்போதைய அரசின் சில அமைச்சர்கள் ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் வகையில் கருத்து...