ரணிலின் ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனம் வியாழனன்று

0
154

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் வியாழக்கிழமை (29) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வெளியிடப்படவுள்ளது.

“இயலும் ஸ்ரீலங்கா” என்ற தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் இந்தக் கொள்கை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மக்கள் அனைவருக்கும் நல்லதொரு நாட்டைக் கட்டியெழுப்புவது “இயலும் ஸ்ரீலங்கா” என்ற கொள்கைப் பிரகடனத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here