நாட்டில் திட்டமிட்ட குற்றங்கள் அதிகரிப்பு, 2 மாதங்களில் 28 பேர் கொலை!

Date:

திட்டமிட்ட குற்றங்களைத் தடுப்பதற்காக விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பில் புலனாய்வுத் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

தென் மாகாணத்திற்கு மாத்திரம் 200-க்கும் மேற்பட்ட விசேட பொலிஸ் உத்தியோகத்தர்கள் சீருடையிலும் சிவில் உடையிலும் கடமைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆயுதங்களுடன் கடமைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் நாடளாவிய ரீதியில் திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுப்பதற்காக பொலிஸ் விசேட நடவடிக்கை பிரிவு மற்றும் பொலிஸ் நிலையங்களின் அடிப்படையில் விசேட குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இடம்பெறும் பெரும்பாலான குற்றச் சம்பவங்கள், வௌிநாடுகளில் வசிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் முன்னெடுக்கப்படுவதாக கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டினர்.

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாத்திரம் திட்டமிட்ட 24 குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளதாகவும் அவற்றில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கை மீது இந்தியா அதிருப்தியில்!!

இந்தியாவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம்; இந்தியா அதிருப்தியில் இருப்பதாக தகவல் இலங்கை...

எரிபொருள் விலையில் மாற்றம் செய்ய வாய்ப்பில்லை

தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம்...

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறித்த சர்ச்சை தொடர்கிறது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் மற்றும் கர்தினால் தொடர்பான விமர்சனங்கள் உயிர்த்த ஞாயிறு...

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...