பொது வேட்பாளர் விலக வேண்டும் – கஜேந்திரன்

Date:

ஜனாதிபதி வேட்பாளர்களை நோக்கி நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதோடு வெற்றி வாய்ப்புள்ள பிரதான 3 வேட்பாளர்களுக்கும் நாங்கள் வலியுறுத்தி வரும் விடயம் ஒற்றையாட்சியை நீக்கி தமிழர்களுடைய சுயநிர்ணய அங்கீகாரம் சமஷ்டி அரசியலமைப்பை கொண்டு வர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான உத்தரவாதத்தை தங்களது தேர்தல் விஞ்ஞாபனம் ஊடாக அதை வௌிப்படுத்துவதன் மூலம் நாங்கள் அவர்களுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக சிந்திக்க முடியும்.

பொது வேட்பாளரை நிறுத்தி இருக்கும் தரப்பினரிடம் நாங்கள் வேண்டுக்கோள் இந்த தேர்தல் தமிழர்களுக்கு ஒரு முக்கியமான ஒரு தேர்தல் ஆக காணப்படுகிறது. காரணம் பொதுவாக இந்த தேர்தலில் மக்களுக்கு ஆர்வம் குறைவாகவே காணப்படுகிறது.

பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கும் பா.அரியநேத்திரன் மகிப்பெரிய தவறை செய்து இருக்கிறார். உங்களது முடிவுகள் என்பது எங்களது இனம் அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. தயவு செய்து உங்களது நிலைப்பாட்டை கைவிடுங்கள், பொது வேட்பாளர் என்ற நிலைப்பாட்டில் இருந்து பா.அரியநேத்திரன் விலக வேண்டும். என்றும் அவர் கூறியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மின் கட்டணம் அதிகரிக்காது

இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 2025 ஆம்...

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் திட்டம்

உயர் நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தற்போது பணியாற்றும்...

இஷாரா செவ்வந்தி கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி...

அரசாங்க தரப்புக்கு மீண்டும் படுதோல்வி

பத்தேகம கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர்கள் குழுவைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலில், ஐக்கியமக்கள்சக்தி...