Tuesday, September 24, 2024

Latest Posts

மட்டக்குளியில் 26 வயது இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு

மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலிவத்தை பகுதியில் நேற்று (29) இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் தற்போது சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் தொடர்பான திட்டமிட்ட குற்றவாளிகளுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிடுவதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.