Tuesday, September 24, 2024

Latest Posts

குடும்ப அரசியலை ஊக்குவிக்கும் மைத்திரி

பொலன்னறு மாவட்ட மேற்குத் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹம் சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் கையிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளது.

நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொள்ளும் புகைப்படத்தை தனது முகநூல் கணக்கில் பதிவிட்டுள்ள தஹம் சிறிசேன, தம்மீது நம்பிக்கை வைத்துள்ள அனைவரினதும் நம்பிக்கையைப் பாதுகாக்க பாடுபடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கான அதிகபட்ச சேவையை வழங்க தனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு உதவும் என்றும் அவர் மேலும் கூறுகிறார்.

பொலன்னறுவை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவராகவும் தஹம் சிறிசேன செயற்படுகிறார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.