குடும்ப அரசியலை ஊக்குவிக்கும் மைத்திரி

Date:

பொலன்னறு மாவட்ட மேற்குத் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹம் சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் கையிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளது.

நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொள்ளும் புகைப்படத்தை தனது முகநூல் கணக்கில் பதிவிட்டுள்ள தஹம் சிறிசேன, தம்மீது நம்பிக்கை வைத்துள்ள அனைவரினதும் நம்பிக்கையைப் பாதுகாக்க பாடுபடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கான அதிகபட்ச சேவையை வழங்க தனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு உதவும் என்றும் அவர் மேலும் கூறுகிறார்.

பொலன்னறுவை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவராகவும் தஹம் சிறிசேன செயற்படுகிறார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெலிகம பிரதேச சபை தலைவர் சுட்டுக் கொலை!

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபையின் தலைவர் மிதிகம லசா...

இறக்குமதி அரிசிகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை

இறக்குமதி செய்யப்படும் பல வகையான அரிசிகளுக்கு நேற்று (21) முதல் அதிகபட்ச...

காலநிலை மாற்றம் குறித்த அறிவிப்பு

வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகள் பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் கொந்தளிப்பு, சில...

ஐதேகவில் திடீர் மாற்றம்!

அரசியல் ஒற்றுமைக்கான புதுப்பிக்கப்பட்ட உந்துதலைக் குறிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, ஐக்கிய...