பத்மே உட்பட 5 பேர் தொடர்பில் இன்று நீதிமன்றத்தில் தகவல்

Date:

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட கெஹெல்பத்தர பத்மே உட்பட 5 குற்றவாளிகள் தொடர்பில் இன்று (31) நீதிமன்றத்தில் தகவல்களை முன்வைப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களை தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கான உத்தரவு பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

கெஹெல்பத்தர பத்மே, கமாண்டோ சாலிந்த, பாணந்துறை நிலங்கா ஆகியோர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தெம்பிலி லஹிரு, பாக்கோ சமன் ஆகியோர் மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை மற்றும் இந்தோனேஷிய பொலிஸார் இணைந்து நடத்திய ஒன்றிணைந்த சர்வதேச சுற்றிவளைப்பின் மூலம் கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட குற்றவாளிகள் இந்தோனேஷியாவில் நேற்று முன்தினம்(29) கைது செய்யப்பட்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சங்கீத்சன் பிணையில் விடுதலை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சொல்லிசை பாடகர்...

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் 4 மாவட்டங்களுக்கு முதற்கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (12) முற்பகல்...

அரசாங்கம் நீதிமன்ற நியமனங்களை தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு

உச்ச நீதிமன்றத்தில் தற்போது 4 நீதிபதி பதவிகள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்...

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...