Tuesday, September 24, 2024

Latest Posts

கை, கால், விரலை வெட்டியேனும் நோயாளியை காப்பாற்ற வேண்டும்- பொருளாதார நிலைமை குறித்து ரவி கருத்து

1800 பில்லியன் ரூபா அரசாங்க வருமானம் மற்றும் 1300 பில்லியன் பொதுத்துறை சம்பளம் மற்றும் ஓய்வூதியம் கொண்ட நாடாக இலங்கையால் முன்னோக்கி செல்ல முடியாது என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

“இலங்கை சுதந்திரமடைந்து 75 வருடங்களாக பொருளாதாரம் ஸ்தம்பித்துள்ளது. சர்க்கரை நோய் வைத்தியரிடம் சென்று என்ன செய்ய வேண்டும் என்று கேட்டால் சாக வேண்டும் என்றால் அப்படியே செய்யுங்கள் என்று சொல்வார். ஆனால் வாழ வேண்டுமென்றால் ஒரு விரலையோ, கையையோ, காலையோ துண்டிக்க வேண்டும். ஆனால் அதுதான் வாழ வழி. இதுதான் இன்று இலங்கைக்கு நடந்துள்ளது. 1800 பில்லியனை இலங்கை வருமானமாக எடுத்துக்கொண்டு 1300 பில்லியன் அரசாங்க ஓய்வூதியம் மற்றும் சம்பளத்தை எவ்வாறு செலுத்தி இந்த நாட்டை முன்னேற்ற முடியும்? எனவே இது எவ்வளவு அதிகமாக அதிகரிக்கிறதோ, அவ்வளவு அதிகமாக நாட்டின் வீழ்ச்சி நிலை அதிகரிக்கிறது. அதற்காக நாம் காத்திருக்கிறோமா? பலர் சர்வதேச நாணய நிதியத்தை குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் எதார்த்தம் என்னவெனில் நம்மால் சிந்திக்க முடியாது என்று சொல்கிறார்கள். செயல்படுத்த பயப்படுகிறோம். ஆனால் அதை நடைமுறைப்படுத்தியிருந்தால் இன்றைக்கு மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகியிருக்கும்’’ என்றார்.

நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.