பிரபல ஜனாதிபதி வேட்பாளர் மீது தாக்குதல் நடத்த திட்டம்?

Date:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிடைத்த தகவல் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பலம் வாய்ந்த வேட்பாளரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவினர் மிகவும் இரகசியமான அறிக்கையொன்றை பிரதான நீதவான் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பி அறிக்கை இரகசியமாகவும் பாதுகாப்பாகவும் வைக்கப்பட வேண்டுமெனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாக்குதல் திட்டத்தை வெளிப்படுத்தி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு தகவல் வழங்கிய நபரை நீதிமன்றில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை அறிவிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு பிரதம நீதவான் பணிப்புரை விடுத்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...