பிரபல ஜனாதிபதி வேட்பாளர் மீது தாக்குதல் நடத்த திட்டம்?

Date:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிடைத்த தகவல் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பலம் வாய்ந்த வேட்பாளரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவினர் மிகவும் இரகசியமான அறிக்கையொன்றை பிரதான நீதவான் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பி அறிக்கை இரகசியமாகவும் பாதுகாப்பாகவும் வைக்கப்பட வேண்டுமெனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாக்குதல் திட்டத்தை வெளிப்படுத்தி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு தகவல் வழங்கிய நபரை நீதிமன்றில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை அறிவிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு பிரதம நீதவான் பணிப்புரை விடுத்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....

மருந்து உற்பத்தி துறையில் புரட்சிகர மாற்றம்!

100 சதவீதம் இலங்கைக்குச் சொந்தமான மருந்து உற்பத்தி நிறுவனமான சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ்,...

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....