செந்தில் தொண்டமான் தொழிலாளர்களுக்கு வழங்கிய உறுதி

Date:

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சனைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நிச்சயம் தீர்வு பெற்று கொடுக்கும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கம் மீது நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறியது போல தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதனால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை அனைவரும் ஆதரிக்க வேண்டும் எனவும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பொகவந்தலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை மாத்திரம் அன்றி அனைத்து ஏனைய பிரச்சினைகளுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தற்போதைய ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து தீர்வினை பெற்றுக் கொடுக்கும் என அவர் கூறினார்.

அதனால் மலையக மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் கட்டுக்கோப்புடன் இருந்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை வெற்றி பெற செய்ய வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு அனுப்பிய பணத்துக்கும் ஆப்பு!!

இலங்கைத் தபால் திணைக்களம் அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 626,000...

NPP ஆட்சியிலும் ஊழல் – உறுப்பினர் பதவி விலகல்!

குருநாகல் மாநகர சபையில் நிலவும் முறையற்ற நிர்வாகம் மற்றும் ஊழல் மோசடிகளுக்கு...

வித்யா கொலை வழக்கில் நான்கு பேருக்கு மரண தண்டனை உறுதி

யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய, பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்யாவை கடந்த...

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் எங்கே..?

மத்திய வாங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ளாரா...