செந்தில் தொண்டமான் தொழிலாளர்களுக்கு வழங்கிய உறுதி

Date:

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சனைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நிச்சயம் தீர்வு பெற்று கொடுக்கும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கம் மீது நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறியது போல தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதனால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை அனைவரும் ஆதரிக்க வேண்டும் எனவும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பொகவந்தலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை மாத்திரம் அன்றி அனைத்து ஏனைய பிரச்சினைகளுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தற்போதைய ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து தீர்வினை பெற்றுக் கொடுக்கும் என அவர் கூறினார்.

அதனால் மலையக மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் கட்டுக்கோப்புடன் இருந்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை வெற்றி பெற செய்ய வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிதி அமைச்சின் உதவி இயக்குநர் தற்கொலை

இலங்கை நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் (ERD) உதவி இயக்குநராகப்...

இலங்கையின் கடன் சுமை பாரிய அளவில் அதிகரிப்பு

ரூபாய் மதிப்பு சரிவடைந்ததன் விளைவாக நாட்டின் கடன் சுமை ரூபாய் 1.1...

ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

அரசு நிதியை தவறாக பயன்படுத்தி லண்டன் நோக்கி தனிப்பட்ட பயணம் மேற்கொண்டதாக...

கட்சியில் இருந்து முழுமையாக விலகுமாறு எரானிடம் SJB கோரிக்கை

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவின் தலைவராக எரான் விக்கிரமரத்ன நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து,...