மக்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது இப்போது நாட்டை கட்டியெழுப்பும் போராட்டம் உள்ளது – ஜனாதிபதி

Date:

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைத்து தரப்பினரும் பேதமின்றி ஒன்றிணையுமாறு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் மக்கள் போராட்டம் முடிந்து விட்டதாகவும், தற்போது நாட்டை கட்டியெழுப்புவதற்கான பொருளாதாரப் போராட்டம் இடம்பெற்று வருவதாகவும் ஜனாதிபதி வலியுறுத்துகிறார். சுகததாச விளையாட்டரங்கில் நேற்று (06) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 76வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வரலாற்றில் இதற்கு முன்னர் சந்தித்திராத நெருக்கடியை இன்று எதிர்கொண்டுள்ளதாகவும், அனைவரும் ஒன்றிணைந்து தீர்வு காண்பதைத் தவிர வேறு வழியில்லை எனவும் திரு.விக்கிரமசிங்க குறிப்பிடுகின்றார். நாட்டின் கணிசமான சதவீத மக்கள் மூன்று வேளையும் சாப்பிட முடியாத நிலையில் இருப்பதாகவும், வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்காவது ஜனாதிபதி என அவர் கூறலாம், ஆனால் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற குழு தமக்கு இல்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தனக்கு பொதுஜன பெரமுன உட்பட பல கட்சிகளின் ஆதரவு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் நாட்டை கட்டியெழுப்புவதே தமது நோக்கமாகும் எனவும், அதற்காக சகல முயற்சிகளையும் மேற்கொள்ள தயங்கப் போவதில்லை எனவும் திரு.விக்கிரமசிங்க குறிப்பிடுகின்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாளை ஜனாதிபதி அனுரவை சந்திக்கத் தயாராகும் மனோ அணி

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை, தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு நாளை...

புதிய வரி பில் திட்டம் தள்ளிவய்ப்பு

2026 ஏப்ரல் 01 முதல் அமலுக்கு வரவிருந்த மதிப்பு கூட்டு வரி...

மேலும் ஒரு கடல் வழி போதை பொருள் கடத்தல் – அறுவர் கைது

இலங்கை கடற்படையினர் தென்மேற்கு திசையில் உள்ள ஆழ்கடலில் மேற்கொண்ட சிறப்பு...

ஊழல் வழக்கில் சிக்கிய அமைச்சர் பதவி நீக்கப்படுவாரா?

2015 ஆம் ஆண்டு இலங்கை உர நிறுவனத்தின் கொள்முதல் நடவடிக்கையில் ரூ....