பொய்யான தேர்தல் முடிவு அறிவித்தால் தண்டனை

Date:

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குகளின் முடிவுகளை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிடுவதற்கு முன்னர், சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை வெளியிடுவதும், அரசியல் மேடைகளில் தவறான முடிவுகளைக் குறிப்பிடுவதும் தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் போலியான முடிவுகளை வெளியிடுவது அல்லது அரசியல் தளங்களில் தபால் வாக்கு முடிவுகளை குறிப்பிடுவது அரசாங்க அதிகாரிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதாக அவர் கூறினார்.

இவ்வாறான போலியான முடிவுகளை வெளியிடும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளும் சமூக ஊடகங்களில் இந்த நாட்களில் பரவலாகக் காணப்படுகின்றன. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் வெற்றிகரமாக இடம்பெற்றதாகவும், அது தொடர்பில் எவ்வித அசம்பாவிதங்களும் பதிவாகவில்லை எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரச உத்தியோகத்தர்களுக்கு எதிர்வரும் 10 மற்றும் 11ஆம் திகதிகளில் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...