சந்திரிக்கா மற்றும் அவரது மகனுக்கு வெல்கமவின் கட்சியில் முக்கிய பொறுப்பு

Date:

குமார வெல்கம தலைமையில் உருவாக்கப்பட்ட புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் மற்றும் ஆசன அமைப்பாளர்கள் நியமனம் ஆரம்பமாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

சந்திரிகா குமாரதுங்க கம்பஹா மாவட்டத்தின் தலைவராகவும், ஜீவன் குமாரதுங்க கொழும்பு மாவட்டத்தின் தலைவராகவும் இருப்பதாவெல்கம கூறுகிறார்.

ஜீவன் குமாரதுங்க கட்சியின் பிரதித் தலைவராகவும் பணியாற்றுகிறார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் விமுக்தி குமாரதுங்கவை அத்தனகல்ல தொகுதி அமைப்பாளராக நியமிக்கத் தயாராக இருப்பதாக குமார வெல்கம குறிப்பிடுகின்றார்.

இதற்கு முன்னர் பல தடவைகள் விமுக்தி குமாரதுங்க தீவிர அரசியலில் பிரவேசிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த போதிலும், அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என அவர் தெரிவித்திருந்தார்.

தனது மகன் அரசியலில் இருந்து இயன்றவரை ஒதுங்கி இருக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் முன்னாள் ஜனாதிபதி கூறுகிறார்.

தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது கட்சியில் இணைவதற்கு தயாராக இருப்பதாக குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பஸ்களை அலங்கரிக்கத் தடை

பஸ்களை அலங்கரிப்பதற்கும், மேலதிக பாகங்களை பொருத்துவதற்கும் சட்ட அனுமதிகளை வழங்கி வெளியிடப்பட்ட...

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் பின்பற்றப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான தவணை அட்டவணையை கல்வி,...

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுஷிலா கார்க்கி நியமிப்பு

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக முன்னாள் பிரதம நீதியரசர் சுஷிலா கார்க்கி நியமிக்கப்பட்டுள்ளதாக...

பெக்கோ சமனின் நெருங்கிய நண்பர் கைது

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தலைவர்களில்...