தனிமையில் இருந்த தாயும் மகளும் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை

Date:

பதுளை ஹிகுருகமுவ கலனல்பில் தோட்ட கிராமத்தில் வீடொன்றில் வசித்து வந்த தாயும் மகளும் உறங்கிக் கொண்டிருந்த போது இனந்தெரியாத குழுவினரால் கூரிய ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் வசித்த தாய் எச்.எம்.ரன்மாணிகா (80) மற்றும் திருமணமாகாத மகள் ஆர்.எம்.ஜெயவதி (55) ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தபோது வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வீட்டின் மற்றொரு அறையில் இருந்ததாக கூறப்படும் மற்றொரு மகள் ஆர்.எம்.மிசினோனா (60) வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகினர். இதனால் பலத்த காயங்களுக்குள்ளான அவர் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட 80 வயதுடைய ஆறு பிள்ளைகளின் தாயான இவர், கலெனல்பில் தேயிலை தோட்டத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து தனது மகள்களுடன் வீட்டில் வசித்து வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வெதமுல்லவின் பணிப்புரையின் பேரில் பதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இன்றைய வானிலை

நாடு முழுவதும் வடகீழ் பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம்...

பாரிய அளவு நிதி அனுப்பும் வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள்

‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்’ நிதியம் இதுவரை வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்து கிட்டத்தட்ட...

இந்த வரவு செலவு திட்டம் வேண்டாம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தற்போதுள்ள வரவு செலவுத் திட்டங்களைத் திருத்தி,...

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் சேவையில்

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...