தனிமையில் இருந்த தாயும் மகளும் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை

Date:

பதுளை ஹிகுருகமுவ கலனல்பில் தோட்ட கிராமத்தில் வீடொன்றில் வசித்து வந்த தாயும் மகளும் உறங்கிக் கொண்டிருந்த போது இனந்தெரியாத குழுவினரால் கூரிய ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் வசித்த தாய் எச்.எம்.ரன்மாணிகா (80) மற்றும் திருமணமாகாத மகள் ஆர்.எம்.ஜெயவதி (55) ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தபோது வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வீட்டின் மற்றொரு அறையில் இருந்ததாக கூறப்படும் மற்றொரு மகள் ஆர்.எம்.மிசினோனா (60) வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகினர். இதனால் பலத்த காயங்களுக்குள்ளான அவர் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட 80 வயதுடைய ஆறு பிள்ளைகளின் தாயான இவர், கலெனல்பில் தேயிலை தோட்டத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து தனது மகள்களுடன் வீட்டில் வசித்து வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வெதமுல்லவின் பணிப்புரையின் பேரில் பதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் சடலம் மீது உடல் கூற்று பரிசோதனை

கபில சந்திரசேனவின் மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிவதற்காக அவரது உடல் உறுப்புகள்...

தன் மீதான தாக்குதல் செய்தி குறித்து டில்வின் சில்வா!

JVP தலைமையகமான பெலவத்தையில் வைத்து தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சியினரும்...

யாழ். போதனா வைத்தியசாலையில் தீ விபத்து!

​யாழ். மண்ணின் உயிர்நாடியாக விளங்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை...

கப்பில சந்திரசேன தற்கொல?

கப்பில சந்திரசேன “தற்கொலை செய்து கொண்டார்” என்ற தகவல்கள் சமூக ஊடகங்கள்...