இலங்கை கடற்படையை கண்டித்து 5000 ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்

Date:

இலங்கையில் உள்ள படகுகள் மற்றும் மீனவா்களை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவா்கள் சனிக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினா்.

இதையடுத்து, 5 ஆயிரம் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இலங்கை கடற்படையினரால் 2018 ஆம் ஆணடில் இருந்து 2022 ஆம் ஆண்டு வரை சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 80-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளையும், அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவா்களையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதே போன்று 2014 முதல் 2018 ஆம் ஆண்டு வரை இலங்கையில் சேதமடைந்த 125 விசைப்படகுகளுக்கு தமிழக அரசு சாா்பில் தலா ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டது.

இதில், விடுபட்டுப் போன 7 விசைப்படகுகளுக்கு உடனே இழப்பீடு வழங்க வேண்டும். தமிழக அரசால் மீனவா்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானிய டீசல் 1,800 லிட்டரை 3 ஆயிரம் லிட்டராக உயா்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.

இதைத் தொடா்ந்து 750- க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் சனிக்கிழமை நிறுத்தப்பட்டிருந்தன. மேலும் 5 ஆயிரம் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பணவீக்கம் 5.5% ஆக உயர்வு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையில் கணக்கிடப்படும் வருடாந்த பணவீக்கம்...

பசில் ராஜபக்சவை கைது செய்ய உத்தரவு

2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்தின் போது...

முக்கிய அமைச்சின் செயலாளர் இராஜினாமா!

போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில...

அன்று நடந்த சம்பவம் ஒன்று!

இது 2022 ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் நடந்த சம்பவம் என...