துபாயில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட தங்க பிஸ்கட்கள் விமான நிலையத்தில் அகப்பட்டது

Date:

சுமார் ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபா பெறுமதியான ஐந்தரை தங்க பிஸ்கட்டுகளை சட்ட விரோதமாக கொண்டுவந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (21) காலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் காலி பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதான வர்த்தகராவார்.

இவர் டுபாயிலிருந்து SL-226 என்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் இன்று காலை 5.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துக்கொண்டு அவர் விமான நிலையத்திலிருந்து வெளியே செல்லும்போது, பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு அவரது பயணப்பையில் இந்த தங்க பிஸ்கட்டுகளை கண்டுபிடித்து அவரைக் கைது செய்தனர்.

பின்னர், இந்த பயணி மற்றும் அவர் சட்ட விரோதமாக கொண்டுவந்த தங்க பிஸ்கட்டுகள் அனைத்தும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கை மக்களாக நாம் எப்படி மீள்வது! – நளிந்த இந்ததிஸ்ஸ

என் அன்பான சக இலங்கையர்களே, ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும்...

இலங்கையின் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர...

முட்டை விலை 70 வரை உயரும்

பேரிடர் காரணமாக கால்நடை பண்ணைகளுக்கு ஏற்பட்ட சேதத்துடன், ஒரு முட்டையின் விலை...

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...