உயர் பாதுகாப்பு வலயங்களை நியமித்தமைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, அரச இரகசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உயர் பாதுகாப்பு வலயங்களை உருவாக்க முடியாது.
அமைதியான போராட்டங்களை தடை செய்யும் அதிகாரம் அரச இரகசியங்களை பாதுகாக்கும் சட்டத்திற்கு இல்லை எனவும் தெரிவித்தார்.