மாவனல்லையில் மண் மேடு சரிந்து விழுந்ததில் புதையுண்டு உயிரிழந்த மூவரின் சடலங்கள், மீட்கப்பட்டுள்ளன.
மாவனல்லை அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் நேற்று (29) மண்மேடு இடிந்து விழுந்தது.
இதில், கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருந்த சிலர் மண்ணுக்குள் புதைந்தனர்.
இவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக இடம்பெற்று வரும் நிலையில், மூவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.